Sunday, March 02, 2008

சில நேரங்களில்

சில நேரங்களில் சிநேகமாய் சிரிக்கின்றாய்
சில நேரங்களில் நெருப்பாய் எரிக்கின்றாய்.
சில நேரங்களில் மார்கழிப் பனியாகவும்
சில நேரங்களில் சுட்டெரிக்கும் வெய்யிலாகவும் இருக்கின்றாய்.
சில நேரங்களில் பெளர்ணமி நிலவாக குளிர்கின்றாய்
சில நேரங்களில் வெப்ப கதிர்களாய் சுடுகின்றாய்.
சில நேரங்களில் புதிருக்கு விடையாகவும்
சில நேரங்களில் விடையில்லா புதிராகவும் இருக்கின்றாய்.
சில நேரங்களில் யாருமறியாமல் பார்க்கின்றாய்.
சில நேரங்களில் கண்டும் காணாமல் செல்கின்றாய்.
புரியாத புதிராக இருப்பவளே!!
சீக்கிரம் சொல்லிவிடு - உன் மெளனத்திற்கு
உன் அகராதியில் அர்த்தம் தான் என்ன ? ? ? ? ?

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...