
உயிர் துறக்க ஒரு
சில நிமிடங்கள் போதும்..
உயிர் கொடுக்க ஒவ்வொரு
அன்னையும் மறுபிறவி எடுப்பதை
எண்ணிப் பார் !
நீ வெறுமையைக் கொண்டாடுகிறாய்...
வாழ்வை மரணத்தின் கையில் கொடுக்கிறாய்...
நம்பிக்கை எனும் சிறகை உணர் !
கண்ணீர்த் துளிகளை
வார்த்தைகளாக்கி வாதாடு !
துணி்ந்தால் கடல்நம்
காலைத் தொட்டுக் கும்பிடும் !
பயந்தால்
பனித்துளி கூட
மூழ்கடித்து விடும் !
எதிர்கொள் !!!
மரணத்தின் முன் உன்
இறுதி நேர துணிவை
வாழ்வின் மீது திருப்பு !
வாழ்க்கை நாட்கணக்கல்ல..
செயல் கணக்கு...
நல்லதும் கெட்டதும்
உலகத்தில் இல்லை
உள்ளத்தில் தான் !!!
No comments:
Post a Comment