Tuesday, March 25, 2008

எதிர் கொள் !



உயிர் துறக்க ஒரு
சில நிமிடங்கள் போதும்..

உயிர் கொடுக்க ஒவ்வொரு
அன்னையும் மறுபிறவி எடுப்பதை
எண்ணிப் பார் !

நீ வெறுமையைக் கொண்டாடுகிறாய்...
வாழ்வை மரணத்தின் கையில் கொடுக்கிறாய்...

நம்பிக்கை எனும் சிறகை உணர் !

கண்ணீர்த் துளிகளை
வார்த்தைகளாக்கி வாதாடு !

துணி்ந்தால் கடல்நம்
காலைத் தொட்டுக் கும்பிடும் !
பயந்தால்
பனித்துளி கூட
மூழ்கடித்து விடும் !

எதிர்கொள் !!!

மரணத்தின் முன் உன்
இறுதி நேர துணிவை
வாழ்வின் மீது திருப்பு !

வாழ்க்கை நாட்கணக்கல்ல..
செயல் கணக்கு...

நல்லதும் கெட்டதும்
உலகத்தில் இல்லை
உள்ளத்தில் தான் !!!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...