Monday, March 24, 2008

தனிமையிலே சில நிமிடம் !

போட்டியும் இல்லை
பொறாமையும் இல்லை

இனிமேல்
சாதிக்க வேண்டுமென்று
மனதில்
சத்தியமாய் எதுவுமில்லை.

அன்று...
சின்னச் சின்ன
ஆசையெல்லாம்
நெஞ்சுக்குள்ளே கருக்கட்டி
சிறகடிக்க முடியாமல்
சிதைந்து போனதுண்டு.

இன்று...
தனிமையையும்
வெறுமையையும்
சற்றே தணித்து
இளைப்பாற மட்டுமே
இங்கே என் கால் தடங்கள்.

இதற்குள் ஏனோ
இத்தனை வலிகள்...?

பிறக்கும் போதே
அழுது கொண்டு பிறந்தேனா...?

அதனால் தானோ
அழுகையிலேயே
அடிக்கடி நனைகின்றேனா...?

ஓடி ஒதுங்கினாலும்
ஓயாது துரத்தி
தொலைக்க நினைப்பவை எல்லாம்
தொடர்ந்து வருவதும் ஏன்...?

வெறிச் சோடிய மனசு...
அழுது அழுது தோற்ற விழிகள்....
சோர்ந்து போன விரல்கள்...
நடை தளர்ந்த கால்கள்...

ம்...
சொல்ல நினைக்கின்றேன்
சொல்ல நினைத்தாலும்
கேட்பதற்கு யாருமில்லாமல்
என்னோடு புதைந்து கொள்ளும்
என் சோக முகவரிகள்...

அதனால்
இருட்டோடு சில நிமிடம்
தனிமையிலே சில நிமிடம்
என்னையே நானும்
எரித்துக் கொள்கின்றேன்.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...