Tuesday, March 25, 2008

என்று தொலைந்தோம்..???



பாரபட்சமின்றி பண்போடு
புன்னகை சிந்தும் உதடுகள்....
கண்ணில் காணும் காட்சிகள்
யாவும் ரசித்த மனம்...

அறிந்தவர் எல்லாம் அன்பான
நண்பராய் ஏற்ற மனம்....
நிலா முதல் காக்கை வரை
நெஞ்சில் நிறைத்த மனம்....

மலர்,மரம்,ஆகாயம் எனப் பரந்த
பார்வை கொண்ட மனம்...
நாளை பற்றிய பயமும்
நேற்றைய கவலையும்
மறந்த மனம்...

இன்றைய இன்பத்தை
முழுதும் உள்வாங்கி
அனுபவிக்கும் மனம்...

என்று தொலைத்தோம் இவைகளை ..???

குழந்தையும் தெய்வமும் ஒன்றாம்..!!!!!!!!!

என்று தொலைத்தோம் நாம்
தெய்வத் தன்மையை......????

கூட்டிக் கழிக்கும் குணம்
கொத்திச் சென்றதோ???

ஆன்மாவையே மறைத்த மதியீனங்கள்
அழித்து விட்டனவோ???

காண்பதில் எல்லாம் பணப்பார்வை படிய
பரந்த பார்வை மங்கிப் போயிற்றோ???

மனம் சுருங்கி அங்கே
வறுமை குடிகொண்டதால்
தெய்வம் வெளியேறியதோ???

என்று தொலைத்தோம்
தெய்வத் தன்மையை......????

என்று தொலைந்தோம் நாம்???

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...