Sunday, March 02, 2008

தினந்தோறும்

இரவின் துவக்கத்தில்
உறங்க பிடிக்கவில்லை
விடிந்த பிறகும்
இமை திறக்க பிடிக்கவில்லை
சுத்தமாக நீராடி
உடுத்தி
சுகமாக பயணம் செய்து
எதிர்பார்ப்பு இல்லாமல்
கணிப்பொறியின் முன்
இயங்குகின்ற
மனிதப்பொறி
பணி முடியும் சமயம்
ஆம்
மாலையிலும் காலையிலும்
கடிகாரம் என்னை இயக்கியது
அது ஏனோ கடிகாரத்தை
7-க்கும் 5-ந்திற்கும் இடையில்
பார்ப்பதும் இல்லை !
உருவாக்குதல் கடினம்
உணவு எனில் மிகவும்
ஆனால்
வயிற்றுக்குத் தொிவதில்லை
மாறும் வாழ்வில்
என்றும் மாரா ஓர் அம்சம் - பசி.
மீண்டும் முதல் பத்தி -
எதிர்பார்ப்புகள் புாியவில்லை
கடிகாரத்தின் முட்களோடு
போட்டியிடுகிறேன்
காரணங்கள் தொியவில்லை
ஆதவனை ஆவலுடன்
எதிர்பார்ப்போர் யார் ?
நிலவும் அன்றாட நிகழ்வாகி போனது
நிலை மாற்றம்,
இட மாற்றம்,
மனது மட்டும் மாராமல்
குழம்பியே இருக்கிறது

படுக்கையில் கிடந்தபடி
உறங்க நினைக்கிறேன்
அவையங்கள் அனைத்தும் இந்த
தினப்படி அட்டவணையை முடித்தால்
சோர்வுற்றிருக்க
ஏனோ மனது உறங்க மறுக்கிறது.
இந்த நிகழ்வுகள் தினந்தோறும்.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...