இரவின் துவக்கத்தில்
உறங்க பிடிக்கவில்லை
விடிந்த பிறகும்
இமை திறக்க பிடிக்கவில்லை
சுத்தமாக நீராடி
உடுத்தி
சுகமாக பயணம் செய்து
எதிர்பார்ப்பு இல்லாமல்
கணிப்பொறியின் முன்
இயங்குகின்ற
மனிதப்பொறி
பணி முடியும் சமயம்
ஆம்
மாலையிலும் காலையிலும்
கடிகாரம் என்னை இயக்கியது
அது ஏனோ கடிகாரத்தை
7-க்கும் 5-ந்திற்கும் இடையில்
பார்ப்பதும் இல்லை !
உருவாக்குதல் கடினம்
உணவு எனில் மிகவும்
ஆனால்
வயிற்றுக்குத் தொிவதில்லை
மாறும் வாழ்வில்
என்றும் மாரா ஓர் அம்சம் - பசி.
மீண்டும் முதல் பத்தி -
எதிர்பார்ப்புகள் புாியவில்லை
கடிகாரத்தின் முட்களோடு
போட்டியிடுகிறேன்
காரணங்கள் தொியவில்லை
ஆதவனை ஆவலுடன்
எதிர்பார்ப்போர் யார் ?
நிலவும் அன்றாட நிகழ்வாகி போனது
நிலை மாற்றம்,
இட மாற்றம்,
மனது மட்டும் மாராமல்
குழம்பியே இருக்கிறது
படுக்கையில் கிடந்தபடி
உறங்க நினைக்கிறேன்
அவையங்கள் அனைத்தும் இந்த
தினப்படி அட்டவணையை முடித்தால்
சோர்வுற்றிருக்க
ஏனோ மனது உறங்க மறுக்கிறது.
இந்த நிகழ்வுகள் தினந்தோறும்.
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
No comments:
Post a Comment