Monday, March 24, 2008

எழுது ! ..... எழுது !

எழுது! ..... எழுது!
ஓர் கவிதை எழுது
எனக்காக - நீ
ஓர் கவிதை எழுது.....

என்னை மட்டும் நேசிப்பதாய்
எழுதாவிடிலும் பறவாயில்லை என்னையும் நேசிப்பதாய்
ஓர் கவிதை எழுது.....

அழுது அழுது
தூர்ந்த என் விழிகளுக்கு - ஓர்
ஆறுதலாய் நாலு வார்த்தை...

பழுவினைச் சுமந்து சுமந்து
சோர்ந்த என் இதயத்துக்கு
இதமாக இரண்டு வார்த்தை...

எழுது! ..... எழுது!
ஓர் கவிதை எழுது
எனக்காக - நீ
ஓர் கவிதை எழுது!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...