
புலர்கிறது இப்போது
என்றும்
பசுமையாய் வளர்கிறது
புதிதான மனங்களின் மலர்சியால்.......
நான்
என்றோ தேடிய
முடியாத இன்பம் - இன்று
இங்கே கிடைத்தது
இனிய வரமாக.
என்றும்
பசுமையாய் வளர்கிறது
புதிதான மனங்களின் மலர்சியால்.......
நான்
என்றோ தேடிய
முடியாத இன்பம் - இன்று
இங்கே கிடைத்தது
இனிய வரமாக.
தவித்த உள்ளத்தின்
தீராத தவிப்புக்கள் உடைந்தன
அன்பென்ற அழகிய கற்களால்.
பாவிகள் புடைசூளும்
பாழடைந்த மாளிகையில்- இனி
காவிகள் மட்டுமே
என் சொந்தமென்ற
அழியா வடுக்களை
அடியோடு அழிந்தது- இந்த
புதிய உலகம்.
புரியவில்லை ஏனென்று
புதுமைகள் பல என் நெஞ்சில்
தெரியவில்லை யாரிங்கு
பூ வீசிச் சிரிப்பதென்று.
புதுமையாய்ப் பார்க்கின்றேன்
நான் வாழ்ந்த உலகத்தை
பூரித்துப் போகிறேன்
புதினமாய், புனிதமாய்.
மாயமாய், மந்திரமாய்,
விந்தையாய்,தெரியவில்லை
இது எனக்கு.
என் மனம் அறிந்த
மனமென்றின்
மகிழ்வான வரவு.
கலைந்த கனவுகளும்
கடந்த முட்பாதைகளும்
கனமான கவிகளாய் மாறியது.
இன்று
கிடைத்த சுகங்களும்
கிளர்ந்த நினைவுகளும்- என்றோ
ஆகிவிடும் காவியமாய்....
இவ்வுலகின் ஓவியமாய்.
கவியினைக் காதலித்து
கவலைகள் களைந்திட்ட
கன்னியின் காலைகள்
புலரட்டும் என்றென்றும்.
இளமையாய்.......
இனிமையாய்.......
இதமாக.....
இதமான இசையாக......
No comments:
Post a Comment