Sunday, March 02, 2008

பழக்கமாகும்வரை...

முட்டியை உடைத்துக்கொண்டு
இரத்தம் சிந்த வேண்டியிருந்தது
சைக்கிள் பழகும்வரை.
மூழ்கித் திணறி
மூச்சுத் தேடி
அப்பாவை இறுக்கிக் கொள்ள நேர்ந்தது
நீச்சல் பழகும்வரை.
முதன்முதலாய் வீட்டைப் பிாிந்தது
வேதனை தந்தது
கல்லூாி விடுதி பழக்கமாகும்வரை.
இரைச்சல் அணிந்த சாலைகளும்
இதயம் கழற்றிய மனிதர்களும்
வெறுப்பு வளர்த்தன
நகரம் பழக்கமாகும்வரை.
எல்லா சிரமங்களும்
பழக்கமாகும்வரைதான்.
எனவே கவலையில்லை,
பழகிவிடும்...
நீயற்ற மிச்ச வாழ்வும்.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...