Sunday, March 02, 2008

நிழல்களில் வாழுகின்றோம்

மாறி வரும்
நகரத்து வயல் வெளியில்
மரங்களெல்லாம்
களைகளாய்,

வீடு கட்டி வாழ்வை
விாித்து கொள்ள எண்ணி
கூடுகட்டி குடும்பம் நடத்தும்
கூட்டுப் பறவைகளை மறந்தபடி

வெட்டிய மரத்துண்டுகளில்
காலை நேரக்கணங்களிலிவை
கூட்டிய காணங்களும்
துண்டாடப்பட்டபடி

கானக் குயில்களின் இசையில்
கண்விழித்ததை விட்டு
கனரக வாகனங்களின் இரைச்சலில்
கனவு தொலைந்தபடி

அழைப்பு மணியோசையிலும்
அதிகாலை எழுப்பும் மணியோசையிலும்
குயிலின் கீதத்தை
கானப்பறவைகளின் இன்னிசையை
உயிரற்ற 'செல் 'களினால்
உயிர்ப்பித்தபடி

நிஜங்களைத் தொலத்து விட்டு
நிழல்களில் வாழ்ந்தபடி ? ?

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...