Wednesday, November 26, 2008

வேதனை

உன்னை தவிர்க்க முடியாமல்
நான் தவிப்பது தெரியாமல்
நீ தவித்து கொண்டிருப்பது
தெரிந்தும் மவுனமாகவே
இருக்கிறேன் நான்
கூண்டுக்குள் செயலிழந்த
பறவையை போல

வேலிகளை விட்டு
வெளியே வரவும்
வழி தெரியவில்லை
என் இதயத்தை விட்டு
உன்னை வெளியேற்றவும்
வழி தெரியவில்லை

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...