Tuesday, November 18, 2008

மழை இரவின் கதை

அறைக்குள் ஒளிந்து
கொண்டிருக்கும் இருள்
மெழுகுவர்த்தி ஒளியில்
அரை நிர்வாணமாகிறது

மெல்லியதாய் இசைத்துக்
கொண்டிருக்கும் ஜமேக்கக்
காதலனின்
பாடல்

எங்கிருந்தோ
அழும் குயிலின் ஏக்கம்
தனிவழியில் மழை இரவில்
கடந்துபோகும்
பெண்ணின் சோகம்

நட்சத்திரங்களைத்
தொலைத்ததில்
அழுது வடியும் வானம்
இருளைக்கிழித்து
உறுமிப்போகும்
இடியும் மின்னலும்

பனிப்புகாரும் காற்றும்
திசைதெரியாது அலைந்த
இப்படியான
இரவொன்றில்தான்
மழை இரவின்
காதல் கதை
முடிந்துபோனது.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...