அறைக்குள் ஒளிந்து
கொண்டிருக்கும் இருள்
மெழுகுவர்த்தி ஒளியில்
அரை நிர்வாணமாகிறது
மெல்லியதாய் இசைத்துக்
கொண்டிருக்கும் ஜமேக்கக்
காதலனின்
பாடல்
எங்கிருந்தோ
அழும் குயிலின் ஏக்கம்
தனிவழியில் மழை இரவில்
கடந்துபோகும்
பெண்ணின் சோகம்
நட்சத்திரங்களைத்
தொலைத்ததில்
அழுது வடியும் வானம்
இருளைக்கிழித்து
உறுமிப்போகும்
இடியும் மின்னலும்
பனிப்புகாரும் காற்றும்
திசைதெரியாது அலைந்த
இப்படியான
இரவொன்றில்தான்
மழை இரவின்
காதல் கதை
முடிந்துபோனது.
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
No comments:
Post a Comment