Wednesday, January 07, 2009

நினைவுகள்


எழுதப்படும் எல்லா வார்த்தைகளும்
பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும்
சில அனைவருக்காக‌
சில சிலருக்காக‌
ப‌ல‌ என‌க்காக
‌மிக‌ப்ப‌ல‌ உன‌க்காக‌

ம‌ன‌துள் ம‌ட்டுமே உற‌வாடி
விளையாடிய‌ ப‌ல‌ க‌விதைக‌ள்
ம‌ன‌தோடு தேங்கிவழிந்து கொண்டிருந்த‌
பல‌ வார்த்தைக‌ள்

இன்று
தோளில் இருந்து ந‌ழுவி
இடை விட்டு இற‌ங்கிவிர‌ல் பிடித்து
ந‌ட‌ந்து ப‌டி ஏறி
உன் வீட்டுக்க‌த‌வு த‌ட்ட‌த்தொட‌ங்கி விட்டது

ஒவ்வொரு நாளும் க‌த‌வு
திற‌க்க‌ப்ப‌டும் நேர‌த்துக்காக‌

திறக்கப்படும் கதவின் பின்னால்
நிற்கும் ஒற்றை ஜோடி
கால்களுக்காக

ஒற்றைக்காலில் என் கவிதை செய்த
தவத்தின் பலனாக

உனக்குள் எனது நினைவிருக்குமா
தெரியவில்லை

நினைவுகளின் மீட்டெழுப்புகளின்
பொழுதுகளில்
கடந்த காலங்களின் காயங்கள்
நிச்சயம் தொடரும்

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...