Thursday, November 13, 2008

நீ வந்து விட்டாய்



யாவும் பாதியிலேயே
நிறுத்தப்பட்டு விட்டன .

விரும்பிச் சுவைத்துக்கொண்டிருந்த தேநீரொன்று ....
விருப்பமான தொலைபேசி உரையாடலொன்று .....
குழந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த முத்தமொன்று .....
விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்த பாடலொன்று ......

நீ வந்து விட்டாய்.
யாவும் ஆறிவிட்டன .
யாவும் துண்டிக்கப்பட்டன .
யாவும் உலர்ந்து விட்டன .
யாவும் நிறுத்தப்பட்டுவிட்டன .

நீ வந்து விட்டாய் .
நான் செய்துகொள்ளவிருந்த
தற்கொலையும் பாதியிலேயே .........

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...