Sunday, November 30, 2008

முதல் மழை

முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் இதமாய் மிதந்ததே


கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்றாய் இடம் என்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்


முதல் மழை எனை நனைத்ததே
ல ல லலா

முதன் முறை ஜன்னல் திறந்ததே
ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்


பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

Saturday, November 29, 2008

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ

யாரோ..

ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ

ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்

ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ

யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

என் தலையணை...!

முகம் புதைத்து அழும் பொழுது
கண்ணீரை கவர்ந்திருக்கிறது ,

அல்ப சந்தோஷங்களையும் கூட
ஆரவாரமில்லாமல் ரசித்திருக்கிறது ,

நியாமான கோபங்களை
அமைதியாக அங்கீகரித்திருக்கிறது ,

மொத்தத்தில் என் எல்லா உணர்வுகளையும்
அருகில் இருந்து பகிர்ந்து கொண்டிருக்கிறது ...

ஆதலால் என் தலையணை
அவனை விட மேலானது !

Friday, November 28, 2008

முகத்தை தொலைத்த முகமூடி !

ஒரு முகம்
சிலரால் விரும்பப்படுகிறது ...

பலரும் விரும்பிடவேண்டி
ஒப்பனை செய்து கொள்கிறது ...

எல்லாரும் விரும்பிடவேண்டி
ஒவ்வொருவருக்கும் ,
ஒவ்வொரு முகமூடி அணிகிறது...

யாரும் அந்த முகத்தை
பார்க்கவில்லை - முகமூடியை
பார்க்கிறோம் என உணரவும் இல்லை !

விரும்பப்படாத முகம் ,
அழகானதாகவும் இருக்கக்கூடும் !

Thursday, November 27, 2008

தெரியவில்லை ......

தெரியவில்லை ......

நீ உன்னோடு எடுத்துச் சென்றது
என் சிறகுகளையா..
இல்லை
வானத்தையா ..???

Wednesday, November 26, 2008

இடைவெளி

மிக அற்புதமான கவிதையாக
இருந்திருக்கலாம்
மனதுக்குள்ளேயே தொலைத்துவிட்டேன்.

பணிக்கும் துன்பத்திற்கும் இடையில்
எப்போதாவது எட்டிப் பார்க்கும் கவிதை

தாளைத் தேடி தடம் பதிக்கும்
வேளை வரும் முன் தொலைந்துவிடுகிறது
அல்லது உருமாறி
ஒவ்வாமையாகி விடுகிறது.

எப்போதோ உடன் படித்த நண்பர்கள்
முகம் நின்று பெயர் மறைந்து போவது போல்
கருத்தில் எழுந்து
இருட்டில் மறைந்திருக்கிறது...
கவிதை!

அது புதிதாக ஒன்றைச் சொல்ல வந்திருக்கலாம்
யாராவது புகழும்படியாக
ஏதாவது கொண்டு வந்திருக்கலாம்
குறைந்தபட்சம்
எனக்கு மட்டும் இன்பத்தைக் கொடுத்திருக்கலாம்
பாவம்

இடைவெளிக் குறைவில்
சிக்கிச் சாவது கவிதையும்தான்!

பிரிவின் நிழல்




காதலின் வெம்மையை விட
பிரிவின் நிழல்
சில நேரங்களில் மேலானது !

=============

தொலைக்கவிருந்த என் அடையாளங்களை
மீட்டுக்கொடுத்தது - உன் பிரிவு !

மழை துளி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே..!

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு
என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டிக் கொண்டேன்
இறுதி சடன்கில் மிதிகள் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூகிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)

பிரிவு

உன்னைச் சந்திக்கும் வரை உன் முகத்தை
யார் யாரோ முகத்தில் தேடிப்பார்த்தேன்
உன்னைப் பிரிந்த பின் என் முகத்தை யார் யாரிலோ
தேடிப் பார்க்கிறேன்.

வேதனை

உன்னை தவிர்க்க முடியாமல்
நான் தவிப்பது தெரியாமல்
நீ தவித்து கொண்டிருப்பது
தெரிந்தும் மவுனமாகவே
இருக்கிறேன் நான்
கூண்டுக்குள் செயலிழந்த
பறவையை போல

வேலிகளை விட்டு
வெளியே வரவும்
வழி தெரியவில்லை
என் இதயத்தை விட்டு
உன்னை வெளியேற்றவும்
வழி தெரியவில்லை

Tuesday, November 25, 2008

நெருடல்கள்

மேடையில்
நடந்தால்
கருத்தரங்கம்
அதுவே
டீக்கடையில்
நடந்தால்...?

சாமான்யன்
சொன்னால்
பொய்
அதையே
வழக்கறிஞர்
சொன்னால்...?

குற்றவாளி
செய்தால்
கொலை
அதையே
நீதிபதி
செய்தால்...?

அதிகாரி
செய்தால்
தண்டனை
அதையே
அரசியல்வாதி
செய்தால்...?

பிரயாணி
செய்தால்
ஈவ்டீசிங்
அதையே
நடத்துனர்
செய்தால்...?

Wednesday, November 19, 2008

மெளனத்தின் மொழி

எவர்க்கும்
தெரியாத
ரகசியமாய்
நான்கு
சுவருக்குள் மோதி
மீண்டும்
என்னுடன்
பேசிக்கொண்டிருக்கிறது

சிந்தனைகளின்
சிதைவு
உணர்வுகளின்
சோர்வு
இதயத்தின்
இயக்கம்
மெளனமாக
நின்றுவிடும்

தருணங்களுடன்
கடந்து கொண்டிருக்கிறது..

Tuesday, November 18, 2008

மழை இரவின் கதை

அறைக்குள் ஒளிந்து
கொண்டிருக்கும் இருள்
மெழுகுவர்த்தி ஒளியில்
அரை நிர்வாணமாகிறது

மெல்லியதாய் இசைத்துக்
கொண்டிருக்கும் ஜமேக்கக்
காதலனின்
பாடல்

எங்கிருந்தோ
அழும் குயிலின் ஏக்கம்
தனிவழியில் மழை இரவில்
கடந்துபோகும்
பெண்ணின் சோகம்

நட்சத்திரங்களைத்
தொலைத்ததில்
அழுது வடியும் வானம்
இருளைக்கிழித்து
உறுமிப்போகும்
இடியும் மின்னலும்

பனிப்புகாரும் காற்றும்
திசைதெரியாது அலைந்த
இப்படியான
இரவொன்றில்தான்
மழை இரவின்
காதல் கதை
முடிந்துபோனது.

Monday, November 17, 2008

நீயும் வா நிலா

நின்றதெல்லாம் நின்றபடி இருக்க
இந்த நிலா மட்டும்
என்கூட வரும் எனில்
இன்னும் நீள வேண்டும்
இந்த இரயில் பயணமும்
எனது இரவும்.

என் புரிதல்.....!

கடலில்
அழும்
மீனின்
கதறலாய்
கரைகிறது
என்கேள்விகள்

தூங்க நினைக்கையில்
விழித்துக்கொள்ளும்
துயரத்தொடர்கள்
பகலையும்
ஆக்கிரமிக்கிறது
பயத்தின்
நிழல்கள்

எதிர்த்து
எதிர்பார்த்து
கழைத்த
மனதிடம்
கேழாதீர்கள்
கவிதையை

இன்று
என்னிடம்
மயக்கும்
நினைவுகளும்
மயங்கும்
பொழுதுகளும்
கனவுகளும்
செத்துப்போயின

எவரும்
புரிந்திடா
என்
கேள்விகளும்
என்
புரிதலும்

தனித்திருந்து
எதை
சாதித்திடப்போகிறது

Sunday, November 16, 2008

வெளிச்சமும் இருளும்



வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

நீண்டிடும் விளிம்புகள்

பாராதபோதும்,
நினைவுகள் நிறைக்கும்
உண்மைதான் - உன்
உணர்வுகளின் ஓரங்களில்
வரியாய் ஓடிடும்
எனக்குள்ளே அழைத்திட்ட
நிசப்தக் குரலின்
நீண்டிடும் விளிம்புகள்.

Saturday, November 15, 2008

உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்



உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது
வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும்
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள்
தென்படக்கூடும் ..

மழைக்கால டைரிக்குறிப்பு



மழைபெய்ய வாய்ப்பிருப்பதை
சொல்லாமல் சொல்கிறது
மேகங்கள் சூழ்ந்திருக்கும் மெல்லிருட்டு

இணை தேட வைக்கிறது
நடுங்க வைக்கும்
குளிர்

எப்போதும் அருந்தும்
தேநீரை. . .
இன்னும் இதமாக்கிவிடுகிறது
நிலவும் சூழல்

ஒற்றையடிப் பாதையில்
தேர் வருவதைப் போல
ஆசிர்வதிக்கப்பட்ட நீர்நிலைகள்
நிரம்பி வழிகின்றன

திரும்பும் திசையெங்கும்
புன்னகைக்கும் பசுமை
வறண்டு கிடக்கும்
வாழ்வின் கரங்களில்
நம்பிக்கையைப் பரிசளிக்கிறது

குழந்தைகள் உலவும்
வீடுகளை ஞாபகப்படுத்துகிறது
வனங்களில் உலவும்
விதம்விதமான
பட்டாம்பூச்சிகளும்
ஒரேமாதிரியான
தட்டாம்பூச்சிகளும்

முகம் அறியாத பாடல்
பழக்கமாகிவிட்டது
கேட்டுவிட்டுப் போகிற நமக்கும். . .
பாடிவிட்டுப் போகிற பறவைகளுக்கும். . .

மழைக்காலத்தைப் போல
இத்தனை ரம்மியமானதில்லை
வேறெந்தக் காலமும்!

Friday, November 14, 2008

திரைச்சீலை



மெல்லியதொரு திரைச்சீலை
நம்மிடையே
அவசியப்படுகிறது

அநேகக் காரணங்கள்
அதற்கானதாய்
என்னிடத்தில்

உன் விழிகளின் வசீகரம்
என்னை விழுங்கிடாதிருக்கவும்

சுவாசத்தின் வெம்மைதனில்
நெகிழ்ந்து இளகாதிருக்கவும்

சிநேகத்தின் பரஸ்பரங்களில்
சிதறுண்டு போகாமலிருக்கவும்

இன்னும்
இனியும்
எத்தனையோ அத்தனையும்
எனைப் பத்திரப்படுத்த

எப்பொழுதேனும்
இதனில் என்னை
முழுவதுமாய் வாரிச்சுருட்டி
உன் உள்ளங்கைக்குள்
பொதிந்து வைக்கவும் ஆகிறது ...

Thursday, November 13, 2008

நீ வந்து விட்டாய்



யாவும் பாதியிலேயே
நிறுத்தப்பட்டு விட்டன .

விரும்பிச் சுவைத்துக்கொண்டிருந்த தேநீரொன்று ....
விருப்பமான தொலைபேசி உரையாடலொன்று .....
குழந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த முத்தமொன்று .....
விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்த பாடலொன்று ......

நீ வந்து விட்டாய்.
யாவும் ஆறிவிட்டன .
யாவும் துண்டிக்கப்பட்டன .
யாவும் உலர்ந்து விட்டன .
யாவும் நிறுத்தப்பட்டுவிட்டன .

நீ வந்து விட்டாய் .
நான் செய்துகொள்ளவிருந்த
தற்கொலையும் பாதியிலேயே .........

Wednesday, November 12, 2008

கண்ணீர்

சில நேரங்களில்
எல்லையற்ற மகிழ்ச்சி என்னுள் பூக்கும் போது
கண்ணீர் என் கண்ணாடி

சில நேரங்களில்
விலா கொள்ளாமல் நான் சிரிக்கும் போது
கண்ணீர் என் கடிவாளம்

சில நேரங்களில்
சிறுதுகள்கள் உள்ளேறி உறுத்தும் போது
கண்ணீர் என் மருந்து

சில நேரங்களில்
இதயத்து சுமை ஏந்தி நான் துவழும் போது
கண்ணீர் என் சுமைதாங்கி

சில நேரங்களில்
துயரங்கள் எனை ஆழ்த்த முயலும் போது
கண்ணீர் என் வடிகால்

சில நேரங்களில்
எவருமில்லா தனிமையில் நான் தவிக்கும் போது
கண்ணீர் என் துணை

சில நேரங்களில்
என்னை மீட்க நான் எத்தனிக்கும்போது மட்டும்
கண்ணீரும் என் ஆயுதம்

பிறகு ஏன் அழவேண்டும்?



'பாட்டிதான் சொன்னாள்
தேவதைகள் பறக்கும் என்றும்
தேடும் வேளையில் வராது
தேவைப்படும் வேளைகளில் வருமென்றும்..,

Tuesday, November 11, 2008

அந்தரங்கம்



அடுத்தவரின் அந்தரங்கமறிய
ஆசையில்லாதவர்
யாருமில்லையிங்கு!

சுவாரஸ்யம் தேடித்திரியும்
சில மனிதப்புலிகளுக்கு
ஓடத்தெரியாத மான்களென
மாட்டிக்கொள்கின்றன
கசிந்துபோன சில அந்தரங்கங்கள்!

ஒழுகிபோன ஒவ்வொரு அந்தரங்கமும்
ஆயிரம் முறைகள் பொழியும்
அடைமழையாய்!

செய்தித்தாள் துணுக்குகள் முதல்
குழாயடி பெண்களின் கிசுகிசு வரை
அரங்கேற்றத்துடனே அம்பலமாகின்றன
அவை!

நமக்கேன் வம்பு என
ஒதுங்கிச்செல்லும் கால்கள்கூட
காதுகள் கூர்மையாக்கியே நடக்க,

அந்தரங்கம் அறிதலென்பது
யாருக்கும் வெறுப்பதேயில்லை,
தனதானது தெருமுனையில்
சிரிக்கப்படும் வரையிலும்!

கவிதைகளும் உறவுகளும்......!



என் கவிதைகள் என்னுடனே
இருக்கட்டும் - அவை
வெளிப்பட்டால் பல மனங்கள்
புன்ணாகும் - சில உறவுகள்
பாழாகும்.

ஆதலால் குமறும்
எரிமலையாய் கவிதைகள்
என்னுள் இருக்கட்டும்.

மன விளிம்பை தாண்டி
என் பேனா நுனியால்
கசிந்தாலும் அவை கறை
படிந்த தாள்களோடு நிக்கட்டும்..
அதை தாண்டி உன்
விழிகளில் எட்ட வேண்டாம்
என் கவிதைகள் என்னுடனே
இருக்கட்டும்..............

Saturday, November 08, 2008

நட்பு காலம்

மௌன மொழி


மௌனம்
வார்த்தைகளற்றது
தூரத்து தேசங்களையும் கடக்கிறது
தன்னிலை மாறாமலேயே.

நெருக்கத்திலும்
நேசத்திலும் நெருக்கமாகி
புரிதலின் ஆழத்திற்கு
அழைத்து செல்கிறது.

மௌனத்தைவிட
தனிமை அழகென்றாலும்
தனிமைக்கு துணைசேர்ப்பது
மௌனம்.

வீட்டுமாடி நிலா வெளிச்சத்திலும்
வானம் பார்த்து ப்ரியநேசத்தை
அசைபோடுவதிலும்
மணம் நிறைக்கின்றன
மௌன மல்லிகைகள்.

Friday, November 07, 2008

நட்பு

முதன்முதலாய் பார்த்துக்கொண்டது,

பரஸ்பரம் புன்னகைகள்
பறிமாறிக்கொண்டது,

அறிமுகத்தில் தொடங்கி
கதைகள் பேச ஆரம்பித்தது,

உன் அருகாமை இல்லாத‌
பொழுதுகளில் தவித்துப்போனது,

இவையெல்லாம் நடந்தேறிய‌
தேதிகளும் கிழமைகளும்
சத்தியமாய் நினைவில்லை,
நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!

Thursday, November 06, 2008

அமாவாசையில் பிறந்தவர்களின் குணாதிசயம்

ஒவ்வொரு மாத அமாவாசையைப் பொறுத்து அவர்களின் குணாதிசயம் அமையும்.

அதாவது,

சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்கள்.

ஆணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும்,

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்கள்.

ஆவணி மாதத்தில் (அமாவாசையில்) பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்கள்.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்கள்.

ஐப்பசியில் பிறந்திரொந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.

கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்கள், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்கள்.

மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்றும் இருப்பர். 40 வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.

தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகள். பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகள்.

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் கெட்ட குணங்களைக் கொண்டும் இருப்பார்கள்.

ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லை என்றால் வாழக்கை அவ்வளவுதான், அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமையும்.

Wednesday, November 05, 2008

சில சமயம்....!

தொலைந்து போன
காகிதங்கள்
மீண்டும் கிடைத்தது போல்
மகிழ்ச்சி!

மனசு வெட்கப் படாமல்
சில சமயம்
தனக்குத் தானே
குளித்து கொள்ளும்..

ரகசியமாய்க் கனவை
அடைகாத்து வைத்து
குஞ்சு பொறிப்பது போல்
சில துளி நிகழ்வுகள்..

தங்காது எனத் தெரிந்தும்
தென்றலை சுகிக்கும் மனம்..

எதைக்
கட்டிப் போட முடியும்..
கட்டுப்படுகிறவை
தானாய் விரும்பாமல்...!

மனசு

வேகமாய் விழுந்த மின்னல்
கரைந்து போகும்
காற்றோடு ஒரு நொடியில்

பசுமரத்தாணி போல்
சில விஷயம் மட்டும்
சிம்மாசனத்தில்.

ஓவ்வொரு நொடியும்
யாரோ, என்னவோ,
எதுவோ, எப்படியோ….

பழைய விதைகளை பதியமிட்டதில்
புதியதாய் முளைக்கும் கனவுகள்,
தினம் தினம்.

கதவு திறந்துதானிருக்கிறது.
இன்னும் பல
கனவுகளுக்கு.

மனசு

வேகமாய் விழுந்த மின்னல்
கரைந்து போகும்
காற்றோடு ஒரு நொடியில்

பசுமரத்தாணி போல்
சில விஷயம் மட்டும்
சிம்மாசனத்தில்.

ஓவ்வொரு நொடியும்
யாரோ, என்னவோ,
எதுவோ, எப்படியோ….

பழைய விதைகளை பதியமிட்டதில்
புதியதாய் முளைக்கும் கனவுகள்,
தினம் தினம்.

கதவு திறந்துதானிருக்கிறது.
இன்னும் பல
கனவுகளுக்கு.

வாரணம் ஆயிரம்

நேற்று இரவு வழக்கம்போல் மெல்லிய சத்தத்தில் பாடல்கள் ஒலிக்க தூங்கப் போன்னே. வழக்கமாய் கேட்ட பாடல்களே வந்துக் கொண்டிருக்க, திடிரென இது வரை கேட்டிராத பாடல் ஒன்று வந்தது. ஆரம்பமே ஏனோ வெகுவாய் கவர்ந்தது. பாம்பே ஜெயஷ்ரீயின் குரலோ என் நினைக்கத் தோண்றியது.. பாடலிலும் ஹாரீஸின் வாசனை அடித்தாலும் ஒரு சந்தேகம். சுகமா சோகமா எனப் புரியாமால் அந்த இசையில் லயிக்கத் தொடங்கினேன்.

"அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக‌ தடை இனி....."

கண் மூடி கேட்டேன். யாரோ ஒருவர் இதயத்தை கசக்கி ரத்தத்தை பிழிவது போல் ஒரு வலி. கண்திறந்தேன். மயான அமைதி. ஊர் முழுவதும் கண்ணயர்ந்த நேரம் ,வெகு நாட்களுக்கு பின் கண்கலங்கினேன். இது சோகமா சுகமா புரியவில்லை. எழுதியவர் மீது அளவில்லா கோபம். தாமரையாகத்தான் இருக்க முடியும். ஒரு பெண்ணின் உணர்வை இத்துனை வீரியத்துடன் பதிவு செய்யும் ஆண்கவிஞன் இன்னும் வரவில்லை. இருந்தால் அது முத்துக்குமாராகத்தான் இருக்க முடியும். வலையில் வந்து மேய்ந்தால் தாமரைதான்.. ஆனால் குரல், சுதா ரகுனாதன். எத்துனை முறை ரிப்பீட் செய்தேன் என நினைவில்லை.

"எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் திறந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ.. "

சொக்கிப் போனேன். கண்ணுக்கு எட்டிய வரை யாருமில்லா இரவு. தவளைகளும் எனக்காக அமைதி காத்தன. சுவரில் சாய்ந்து நானும் பாடத் தொடங்கினேன். தூரத்தில் நிலா என்னைபோல தனியாக. யாரும் இல்லை என்றாலும் அழகாய் பொழிந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் எனதருகில் வந்து என்னை மடியில் ஏந்திக் கொண்டது. எனக்காக‌ ஒரு கதை சொன்னது. ஆறுதலாய் உணர்ந்தேன். பின் ஏனோ விலகி சென்றது. இத்தனை நாள் இந்த அழகிய இரவையும், நிலாவையும் ரசிக்காமால் வீணடித்ததை நினைத்து நொந்தேன். இவை அழகா, இல்லை இந்தப் பாடல் எல்லாவற்றையும் அழகாக்கியதா? சுதாவின் குரலில் இன்னும் மயங்கியே இருந்தேன். அதிலும் அந்தப் பாடல் முடிவடையும் நேரம் ஒரு ஆண்குரல் அந்த மெட்டை ஹ‌ம் செய்யும்.. கேட்டுப் பாருங்கள். ரொம்ப நாளாச்சு.. தாங்க்ஸ் ஹாரீஸ் மற்றும் குழு...


பல்லவி

அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக‌ தடை இனி....."


சரணம் -1


எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் திறந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ..

ஒரு சிறு வலி இருந்ததுவே

இதயத்திலே இதயத்திலே..

உனதிரு விழி தடவியதால்

அழித்துவிட்டேன் மயக்கத்திலே..

உதிரட்டுமே உடலின் திரை

இதுதானே இனி நிலாவின் கறை கறை..


சரணம் -2

சந்தித்தோமே கனாக்களில்

சில முறையா பல முறையா!

அந்தி வானில் உலாவினோம்

அது உனக்கு நினைவில்லையா?

இரு கரைகளை உடைத்திடுவே

பெருகிடுமா கடலலையே

இரு இரு உயிர் தத்தளிக்கயில்

வழி சொல்லுமா கலங்கரையே

உனதலைகள் எனையடிக்க

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட‌..

Tuesday, November 04, 2008

நகைச்சுவை

இரட்டை குழந்தைகளில் ஒருத்தன் பெயர் பீட்டர் என்றால் இன்னொருத்தன் பெயர் இன்னா?

Repeater
----------------------------

கணக்கு புத்தகம் ஏன் பெஜாரா இருக்கு?

It has got lot of problems to solve

தமிழா!... தமிழா!....

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் —?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

உயிர்ப்பு

உறுப்புகள் உயிரல்ல
சவத்திடமும் உறுப்புகள்…

இயக்கம் உயிரல்ல
சுழலும் மின்விசிறி…

புருவம் கேள்விக்குறியாய்?
பின் எது?
தேடினேன்… தேடினேன்
தேடல் உயிர்ப்பு.

கண் பேசும் வார்த்தைகள்

காதலும் காற்றைப் போலத்தான்.அது கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. சொல்லபோனால் காற்று நுழையாத இடத்தில் கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன் போல் வரும் காதல் உரிமையாளன் போல் வீட்டுக்குள் தங்கிவிடுகிறது. காலம்காலமாக இந்த மண்ணில் ஜெயித்த காதலைவிட தோல்வியுற்ற காதலும் ஒரு தலைக் காதலுமே காவியமாகி நம் மனதில் இடம் பெற்றிருக்கின்றன.

"இந்த சோகம்கூட சுகமானது.ஏனென்றால் இது நீ தந்தது" என்கிறான் ஒரு உருதுக் கவிஞன்.தண்ணீரை விடவும் இரத்தததை விடவும் அடர்த்தியானது கண்ணீர்த் துளி.இதயத்தின் அறைகளில் இமயத்தின் பாரத்தை எடுத்து வைப்பவை காதல் தோல்விப் பாடல்கள். அப்படி முத்துக்குமார் எழுதிய ஒருப் பாடல்தான் "7ஜி ரெயின்போ காலனி" என்ற படத்தில் வந்த "கண் பேசும் வார்த்தைகள்". இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அதன் உள்ளே ஊடாடிக்கொண்டிருக்கும் வலி நம் உயிருக்குள் ஊஞ்சலாடும்.

பல்லவி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய‌
கண்ணாடி இதயமில்லை‍ கடல்
கை மூடி மறைவதில்லை!!

காற்றில் இலைக‌ள் ப‌ற‌ந்த‌ பிற‌கும்
கிளையில் த‌ழும்புக‌ள் அழிவ‌தில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மணம் மறப்பதில்லை!
ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை!
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மணம் புரிவதில்லை!

சரணம் 1

காட்டிலே காயும் நிலவை
கண்டுகொள்ள யாருமில்லை!
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை!

தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்குச் சொந்தமில்லை!
மின்னலின் ஒளியைப் பிடிக்க‌
மின்மினிப் பூச்சிக்கு தெரியவில்லை!

விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி!
அலை க‌ட‌லை க‌ல‌ந்த‌ப் பின்னே
நுரைக‌ள் ம‌ட்டும் க‌ரைக்கே சொந்த‌மடி!

சரணம் 2

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது!
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது!

பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது!
பூமியிம் உள்ள பொய்களெல்லாம்
அட புடவை கட்டிப் பெண்ணானது!

புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்!
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்!

முத்தம்




மிப்பெரிய யுத்தங்களின் அதிர்வுகளை விட


மிகச்சிறிய முத்தங்களின் அதிர்வுகள்


உங்களை பயங்காட்டலாம்....!

Monday, November 03, 2008

என்னையும்..மீறி….

உடல் நிலை..
சரியில்லை ..உனக்கு…

மருத்துவமும்..
உறவுகளும்…
மீட்டுத்தந்திருக்கும்..
சுக நிலையை..

என்ன..செய்வதென..
புரிவதற்க்குமுன்..
என்னை..மீறி..
அனுப்பிவைத்தன..
விழிகள்..
சில..
கண்ணீர்த்துளிகளை..

வெற்றி தோல்வி

எனக்கொன்றும்..
வலிக்கவில்லை..
இப்படித்தான்..
திரிகிறேன்..
ஒவ்வொரு..
தோல்வியிலும்..

மறைப்பதற்க்கு..
கற்றுக்கொண்ட..
மறுநொடியே..
அடுத்தது..வெற்றி
என்று..
முடிவு செய்து..
நடக்கிறேன்…

முடிந்த வெற்றியின்.
கடைசி..
களித்துளியில்..
அடுத்த..தோல்வியின்..
கர்வம்..கிழம்பும்..
புரிந்துகொள்ள..
புத்தியிருந்தும்..
மறைக்கத்தெரியவில்லை..
வெற்றித்தோல்விகளை..
எனக்குள்..
இருக்கும்.
எனக்குள்..

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...