Wednesday, July 30, 2008

உண்மையில்

அழுது கொண்டே இருக்கையில்
சிரிக்க சொல்கிறாய்
விழித்து கொண்டிருக்கையில்
கனவாய் வந்து செல்கிறாய்

விடியல் கலைந்து
இரவு தோன்ற
இது தான் உன் வாழ்க்கை
இங்கு தான் உன்
தொடக்கம் என்று
விட்டு செல்கிறாய்


கைகளிலிருந்து நழுக்கொண்டு
மீண்டும் வருவதாய்
எந்த அறிப்பும் இன்றி
இருளை உள்வாங்கிய கண்கள்
உன்னையே நோக்கி நடக்கையில்
கருமேகங்களுக்குள்
ஒளிந்து கொண்டு அழுகிறாய்


அவற்றையும் கடந்து
தொடர்கிறேன்; அழைக்கிறேன்
பார்வையில் பனித்துளிகள்
தெளித்து வழியில்
ஒதுங்கி செல்கிறாய்


இது தான் உன்
தொடக்கம் என்று
சில பூக்களை
எறிந்து செல்கிறாய்


நீ எறிந்த பூக்கள் எல்லாம்
ஏளன புன்னகை பூக்கின்றன
என் வழியெல்லாம்


உண்மையில் எல்லாம்
பொய்களென...

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...