அழுது கொண்டே இருக்கையில்சிரிக்க சொல்கிறாய்
விழித்து கொண்டிருக்கையில்
கனவாய் வந்து செல்கிறாய்
விடியல் கலைந்து
இரவு தோன்ற
இது தான் உன் வாழ்க்கை
இங்கு தான் உன்
தொடக்கம் என்று
விட்டு செல்கிறாய்
கைகளிலிருந்து நழுக்கொண்டு
மீண்டும் வருவதாய்
எந்த அறிப்பும் இன்றி
இருளை உள்வாங்கிய கண்கள்
உன்னையே நோக்கி நடக்கையில்
கருமேகங்களுக்குள்
ஒளிந்து கொண்டு அழுகிறாய்
அவற்றையும் கடந்து
தொடர்கிறேன்; அழைக்கிறேன்
பார்வையில் பனித்துளிகள்
தெளித்து வழியில்
ஒதுங்கி செல்கிறாய்
இது தான் உன்
தொடக்கம் என்று
சில பூக்களை
எறிந்து செல்கிறாய்
நீ எறிந்த பூக்கள் எல்லாம்
ஏளன புன்னகை பூக்கின்றன
என் வழியெல்லாம்
உண்மையில் எல்லாம்
பொய்களென...
No comments:
Post a Comment