நாம் கொண்ட லட்சியங்கள் தோற்றிருக்கலாம்,
பிரிந்தபோது எழுதிய முகவரிகள் மாறியிருக்கலாம்,
கனவுகள் பகிர்ந்தித்தளித்த நண்பர்முகம் மறந்திருக்கலாம்,
காலத்தின் பிணைக்கைதியாய் காதலை கடந்திருக்கலாம்,
உலகில் புதிதாய் பல உறவுகள் கிடைத்திருக்கலாம்,
எங்கு வாழ்கிறோமென்று ஒருவருக்கொருவர்
அறியாமலிருக்கலாம்,அனுபவங்கள் கடந்ததால்,
வாழ்வின் அர்த்தம் புரிந்திருக்கலாம்,
ஆனால் கல்லூரி நினைவுகள் கொடுத்துச் சென்ற ,
நட்பெனும் தழும்பு மட்டும் என் நெஞ்சில் அப்படியே..!
No comments:
Post a Comment