Friday, July 25, 2008

காற்றினிலே வரும் கீதம்

படம்: மீரா
இசை: S V வெங்கட்ராமன்
பாடியவர்: M S சுப்புலக்ஷ்மி

******************************

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் - காற்றினிலே

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுரமோஹன கீதம்
நெஞ்சினில் இன்பக்கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம் - காற்றினிலே

சுனை வண்டுடன் சோலைக்குயிலும் மனங்குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ! என் சொல்வேன்! மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழிகீதம் - காற்றினிலே


நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்துப் பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்- காற்றினிலே

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...