Wednesday, July 02, 2008

ஆயுளை அதிகரிக்கும் காபி!

காபி குடித்தால் இருதயம் தொடர்பான நோய்கள் நெருங்காது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து லண்டன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர். நாள் ஒன்றுக்கு 6 முறை காபி அருந்தும் 41 ஆயிரம் ஆண்கள் மற்றும் 84 ஆயிரம் பெண்கள் ஆகியோரிடம் கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

காபி அருந்துபவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கமும் கண்காணிக்கப்பட்டது.

ஆராய்ச்சியின் முடிவில், புகை மற்றும் மது பழக்கத்தினால் காபி அருந்தாதவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு இருதய நோய் அறிகுறிகளும் தென்பட்டன.

ஆனாலும், தினமும் காபி அருந்தியவர்களின் உடல்நிலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை.

அதிலும் குறிப்பாக, காபி அருந்தும் பெண்களுக்கு மற்றவர்களை காட்டிலும் இருதய நோய், பக்கவாதம் போன்றவற்றுக்கான அறிகுறிகள் 25 சதவீதம் குறைவாக இருந்தது.

இதன் மூலம், 'காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடுகையில், காபி அருந்துபவர்களுக்கு ஆயுள் அதிகம் என ஆய்வு முடிவுகள் உறுதி செய்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...