அடக்க ஒடுக்கமான ஏழை மாணவனாய் கவர்கிறார் நாயகன்(அகில்). நாயகி(தமன்னா) தன்னை கவனிக்கவில்லை என்று கலங்கும் போதும், பின்னர் தமன்னாவின் ஆர்வம் அறிந்து குதூகலிக்கும் போது அத்தனை இன்னொசென்ஸ்! நாயகன், நாயகியின் ஈர்ப்பு மெது மெதுவாய் வளர்வது அழகு.
காதலா நட்பா என்று தவித்து உருகும் தருணங்களில் கறை ஒட்டிக்கொண்ட கர்ச்சீஃப் மற்றும் தொடர்ந்து துரத்தி வரும் ரிஷப்ஸன் பாட்டு சிம்பாலிஸம்கள் கவிதை.
நண்பர்கள் காதலிக்க கூடாது என்று எண்ணும் ஒருத்தியும், நண்பனை காதலிக்கு அவள் தோழியும் – கடைசி கட்டத்தில் மனம் விட்டு பேசிக்கொள்கிற காட்சி-கவிதை
எளிமையே பிரம்மாண்ட அழகு என்று அழுத்தம் திருத்தமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் (பாலாஜி ஷக்திவேல்)
1 comment:
காதல் படத்தை விட கல்லூரி எனக்கு அதிகமாக பிடித்திருந்தது!
Post a Comment