மனங்களின் சங்கமம்
திருமணம்
என்னும் விளக்கவுரை
தந்தவன் யார் ?
கயிற்றின் முடிச்சில்
கட்டுப்பட்டு நிற்கும்
அகலிகைகள்
இங்கே ஏராளம்.
நெருப்புக்கும் நீருக்கும்
இல்லாத சக்தி
நிலத்தில் கிழித்த கோட்டிற்கு !
கர்வத்தில் எவனோ எழுதிய
கட்டுக்கதைக்கு
காலப்போக்கில் 'காவிய ' அந்தஸ்து !
தென்றலின் வருடலிலும்
வண்டின் முத்தத்திலும்
இதழ் சிவந்து சிாிக்கும் பூவிற்கு
கொண்டையில் சொருகப்பட்டு
சிறைமுகம் இங்கே !
வண்டுகளையும் பூக்களையும்
பசை கொண்டு ஒட்டும் சமுதாயம் !
சுமப்பதற்காக பூக்களும்
சுவைப்பதற்காக வண்டுகளுமாய்
சுதந்திரம் இழக்கும் காலங்கள் ..
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
No comments:
Post a Comment