தொடும் எல்லைகள்
தாண்டியும்
சில புள்ளிகள்
செல்கின்றன.
சில கோலங்களுக்குள் அடங்கும்
புள்ளிகள் சொல்கின்றன..
நான் ரொம்ப சௌக்கியம்.
நீ?..
புரிதலுக்கான தேடல்களில்தான்
இந்த தேசம்
தொலைந்து போகின்றது.
வரப்போகும் நாட்களுடன்
நான் வாழ
எனக்கான வாழ்க்கை
கிடைப்பதில்லை.
ஆனாலும்,
எனக்கான
என் வாழ்க்கை
இனிமேல்
எந்த தேதியில் வரும்....!
No comments:
Post a Comment