Friday, June 06, 2008

நீ தீண்டாத என் உயிர்

விவரிப்புகளில் அடங்கிவிடாத வலியோடு அழுத்துகிறது மனதை
புதிதாக வரையப்பட்ட எல்லைக்கோடு
இமைகளை மூட விடாது அச்சமூட்டுகிறது
விலக்கி வைக்கப்பட்டதான மாயபிம்பம்
தடுக்கவியலாது நடந்துவிடுகிறது உயிர்வதை
பெயர் மாற்றி உச்சரித்த கணங்களில்
பாதுகாப்பகவே வைக்கப்பட்டாலும்
அந்நியமாகவே மிதக்கிறது கண்ணாடி கூடுக்குள்
நீ தீண்டாத என் உயிர்

1 comment:

Anonymous said...

அழகாய்...அருமையாய் இருக்கிறது :)

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...