Saturday, October 11, 2008

பிரிதலும், பிரிதல் நிமித்தமும்..



எதன் பொருட்டேனும் நிகழலாம் எதுவும்
எப்போது வேண்டுமானாலும்

தெரிந்து விட்ட மர‌ண‌வ‌லியாய்
முன்ன‌மே நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட பிரிவுகள்

உயிர் ந‌ர‌ம்பை அறுக்கும்ப‌டியான‌
விலகல்கள் இனி சாத்திய‌மில்லை

பீறிடும் அழுகை ம‌றைத்து
பொய்யாய் புன்னகைத்த க‌ண‌ங்களில்,
விசுவிசுத்த காற்றின் சப்தமும்
மடியிருத்திய மழலையின் கொஞ்சல்களும்
கேட்டபடியேயிருக்கிறது
இன்னமும்.

1 comment:

செந்தில்குமார் said...

hi i need sum ideas for this blogg. please call 9944458957. thank you

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...