
வாழ்க்கையின் அதிவேகத்தில்
உணர்வுகளை பத்திரப்படுத்தல்
அசாத்தியமானதாயிருக்கிறது
துயில் கொள்ளுமென் காதில்
கேட்கிறது மெல்லிய விசும்பல் ஒலி
திசைமாறவியலாத கணத்தில்
சிதறிப் போகிறது பிரியம்
வலிந்து தவிர்த்தலில்
உறுத்திக் கொண்டேயிருக்கின்றன
சில நினைவுகளும் கவிதைகளும்..
No comments:
Post a Comment