Tuesday, October 14, 2008

சாத்தியப்புள்ளிகள்



வாழ்வை இனியதாக்கும் பொருட்டு
கனவுப் பாசறைகளில் உலாவத் தொடங்கி
கனவுகள் சமைப்பது மட்டுமே
வாழ்க்கையாகியிருக்கிறது

எல்லாமே சூன்யமாயிருக்கையில்
எங்கு தொடங்கி எதில் முடிக்க??

இருத்தலும் இல்லாதிருத்தலுக்குமான
அடையாளங்கள் அழிந்தொழிந்தபின்
எதைத் தொடர எதை விட??

சுவாசித்தல் மட்டுமே
உயிரோடிருப்பதைப் பறைசாற்றுகையில்
வாழ்தலுக்கான சாத்தியப்புள்ளிகளை
தேடியலைகிறது மனம்
எக்கணத்திலேனும்
அவை கிடைக்கப்பெறலாமென..

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...