சில ரகசியங்கள் இன்னும்
சொல்லபடாமல் இருக்கின்றன..
கறுத்த சுய ரகசியங்களாக
அவை புதைக்க படுகின்றன..
மனதில் ஆழத்தில் வெளிப்படும்
நிறக்கலவைகளாக
சிலரிடம் பகிர்ந்து கொள்ளபடுவதுண்டு
அவற்றின் நிறங்கள் மாறியுள்ளன
என்ற ரகசியம் மறுபடியும்
புதைகிறது
நிறங்கள் இல்லாத
ரகசியங்கள் சில இரவுகளில்
வெளிப்படுகின்றன…
இரவுகளின் நிறங்களை சுமந்து கொண்டு
புகைபடிந்த தண்டாவாள செடிகளை போல
ரகசியங்கள் அவற்றின்
நிறங்களை மறந்து
மேலும் ஆழ புதைகின்றன…
No comments:
Post a Comment