ரம்மியமாய் வந்து
ராட்சச அலையென
என்னை இழுத்துச் செல்லும்
உன் ஞாபகங்கள்
கொண்டு போய் சேர்க்கின்றன
அடர்ந்த மௌனத்தின் தீவில்…
அதன் கரையோரங்களில் எல்லாம்
மணலாய் கொட்டிக் கிடக்கின்றன
உன் குட்டிப் புன்னகைகள்…
மரங்களாய் வளர்ந்து நிற்கின்றன
என்மீதான உன் அக்கறைகள்…
அங்கு தனியே நானிருந்தாலும்
தனிமையாய் இல்லை…
அருகாமையோ
தீண்டல்களோ
பகிர்தல்களோ
இல்லாவிடினும்…
எனக்கு துணையாய்
எப்போதும் என்னைச் சுற்றி
பறந்துகொண்டே இருக்கின்றன
உன் ஸ்பரிசப் பறவைகள்…
ஒருநாள் காலம்
உன்னையும் இந்த தீவில்
கொண்டு வந்து தள்ளும்
என்ற எதிர்பார்ப்போடு…
மகிழ்ச்சியுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நமக்கான மௌனத்தின் தீவில்…
Friday, December 12, 2008
மௌனத்தின் தீவில்…!
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எப்போதும் போலவே சந்திப்புக்கள் சத்தத்தோடும் பிரிவுகள் மௌனத்தோடும் அரங்கேறிப் போனது.
-
நாகரீகம் வளர்ந்தும் நாடோடி வாழ்க்கை வாழ்கிறான் மனிதன். வாழ்வை உணராத வரையில்!
2 comments:
hi nithya how r u . why did't call me. my number is 9944458957 please call me now. i am waiting for your call.
Post a Comment