Tuesday, January 20, 2009

பாட்டியின் கதை

கதைச் சொல்லிக்கொண்டே
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்


விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்.

Friday, January 09, 2009

இன்னும் ஓர் இரவு...!

சலனமற்று துவங்குகிறது மற்றுமொரு காலை...
யாருமற்ற மேசையில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுக்க செய்கிறது...

நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி தேடியே தொலைந்து போகிறது
எனது பகலும் சில நினைவுகளும்...

யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
இரவு நேர மயானமாய்
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...
சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்...

உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...

எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது...
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு...

Wednesday, January 07, 2009

நினைவுகள்


எழுதப்படும் எல்லா வார்த்தைகளும்
பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும்
சில அனைவருக்காக‌
சில சிலருக்காக‌
ப‌ல‌ என‌க்காக
‌மிக‌ப்ப‌ல‌ உன‌க்காக‌

ம‌ன‌துள் ம‌ட்டுமே உற‌வாடி
விளையாடிய‌ ப‌ல‌ க‌விதைக‌ள்
ம‌ன‌தோடு தேங்கிவழிந்து கொண்டிருந்த‌
பல‌ வார்த்தைக‌ள்

இன்று
தோளில் இருந்து ந‌ழுவி
இடை விட்டு இற‌ங்கிவிர‌ல் பிடித்து
ந‌ட‌ந்து ப‌டி ஏறி
உன் வீட்டுக்க‌த‌வு த‌ட்ட‌த்தொட‌ங்கி விட்டது

ஒவ்வொரு நாளும் க‌த‌வு
திற‌க்க‌ப்ப‌டும் நேர‌த்துக்காக‌

திறக்கப்படும் கதவின் பின்னால்
நிற்கும் ஒற்றை ஜோடி
கால்களுக்காக

ஒற்றைக்காலில் என் கவிதை செய்த
தவத்தின் பலனாக

உனக்குள் எனது நினைவிருக்குமா
தெரியவில்லை

நினைவுகளின் மீட்டெழுப்புகளின்
பொழுதுகளில்
கடந்த காலங்களின் காயங்கள்
நிச்சயம் தொடரும்

ரகசியங்கள்..!


சில ரகசியங்கள் இன்னும்
சொல்லபடாமல் இருக்கின்றன..
கறுத்த சுய ரகசியங்களாக
அவை புதைக்க படுகின்றன..

மனதில் ஆழத்தில் வெளிப்படும்
நிறக்கலவைகளாக
சிலரிடம் பகிர்ந்து கொள்ளபடுவதுண்டு
அவற்றின் நிறங்கள் மாறியுள்ளன
என்ற ரகசியம் மறுபடியும்

புதைகிறது
நிறங்கள் இல்லாத
ரகசியங்கள் சில இரவுகளில்
வெளிப்படுகின்றன…
இரவுகளின் நிறங்களை சுமந்து கொண்டு

புகைபடிந்த தண்டாவாள செடிகளை போல
ரகசியங்கள் அவற்றின்
நிறங்களை மறந்து
மேலும் ஆழ புதைகின்றன…

இசை

நாம் ரசித்த இசையை - இப்போது
நான் ரசிக்கிறேன் தனிமையில்
எனினும் இனிமைதான் - என்னோடு
உன் நினைவுகள்.

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...