Thursday, October 10, 2013

உறவுகள்

காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
மலர்களைப் போலத் தான் உறவுகளும்..
நாம் அடுத்த பருவத்தை
எட்டும் பொழுது தடுக்க இயலாமல்
சில உறவுகள்
தானாக உதிர்ந்து போகலாம் ....!

Wednesday, October 09, 2013

நாட்கள்

நாட்கள்
ஒரு பயணம் போலவே!!!!!
நிஜங்களும் பொய்களும்
அருகிலேயேப் பயணிக்கும்.
இறுதியில் கிடைப்பதோ
பொய்களின் படிப்பினையும்,
நிஜங்களின் நேசமும்.
இரண்டுமே வேண்டப்படுவது.
"என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"

Thursday, October 03, 2013

என் கனவுகள்
அடங்கிய
சிந்தனை பேழை
இங்கே
நீர்க்குமிழி போல்
சுக்கல்சுக்கலாக
உடைந்த
வருத்தம்……..
விரலாய் விடியல்

Wednesday, October 02, 2013

மனம்

ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்
என் மனம் பேசுவதை! அப்போது...
மேல் சொன்னதை சொன்னது என் மனம்!
இதில் நான் யார், என் மனம் எது?

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...