Thursday, August 21, 2008

இல்லை...!

கற்பனைகள் மட்டுமே
கவிதைகளில் வருமாயின்
எங்களின் வார்த்தைகளில்
கனவுகள் இல்லை...


அனுபவங்கள் மட்டுமே
கவிதைகளாகுமாயின்
எங்களின் வரிகளில்
நிகழ்வுகள் இல்லை...


காதல் செய்தால் மட்டுமே
கவிதைகள் தோன்றுமாயின்
எங்களின் எழுத்துக்களில்
காதல் இல்லை...

Thursday, August 14, 2008

கடவுள்

உள்ளே
வைத்துக்கொண்டு
உலகமெல்லாம்...
தேடுகின்றான்
மனிதன்...!

Monday, August 11, 2008

பள்ளங்கள்

உடற்பயிற்சி
செய்யாமலே
இளைத்தேன்
சாலைகளால்!
அதில் உள்ள
பள்ளங்களால்

Tuesday, August 05, 2008

இருளும் வெளிச்சமும்

இருளின் விரல்கள் நீண்டு
எடுத்துக் கொள்கிறது
ஒளியின் கைகளில்,
நிறைந்திருக்கும் நம்பிக்கை வெளிச்சத்தை!

இதயத்தின் இடுக்குகளிலிருந்து
எண்ணம் நீளுகிறது,
உன் இதமான புன்னகையின்
கதகதப்பைத் தேடி.

Saturday, August 02, 2008

நினைவுகள்

காணாமல்போன என் கவிதைப்
புத்தகத்தை தேடுகிறேன்
மறந்து போன என் நினைவுகளை
மீட்பதற்கு ........!

Friday, August 01, 2008

மனம்

முடிவிலி வரை

என் மனம் சென்றாலும்

முடிவது உன்னிடம் தான் ......!

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...